சினிமா செய்திகள்
கோலாகலமாக நடைபெற்ற சர்கார் பாடல்கள் வெளியீட்டு விழா!
விஜய்யின் சர்கார் பாடல்களை அவரது ரசிகர்கள் கையால் வெளியிடும் வகையில், படக்குழுவினர் செய்த ஒரு விரல் புரட்சி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
இன்று மாலை சர்கார் பாடல்கள் விழா தனியார் கல்லூரி ஒன்றில், நிகழ்ச்சி நடந்து வருகிறது. நிகழ்ச்சியில், டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpicturs.in மூலம், விழாவில் கூடியிருந்த அவரது ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல்போன்களின் மூலம் அனைத்து பாடல்களையும், விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்டனர். இந்த முயற்சி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த இணையதளத்தில் அனைத்துப் பாடல்களும் இருக்கின்றன.
நிகழ்ச்சியில் பேசிய, ராதாரவி, ”இப்போது நமது ஊரில் இருக்கும் சர்கார் சும்மா நடந்துகிட்டு இருக்குது. சன் பிக்சர்ஸ்க்கு எப்போது சர்காரை எடுக்க வேண்டும் என்பது தெரியும். தளபதி நீங்கள் சமுதாயத்துக்கு தேவை. இந்த விழா மாநாடு போல் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.
கீர்த்தி சுரேஷ், தான் ஒரு தளபதி ரசிகர் என்றார். நிகழ்ச்சியில், பேசிய பாடலாசிரியர் விவேக், சிம்டாங்காரன் பாடலுக்கு ‘கண் சிமிட்டாமல் பார்க்க வைப்பவன்’ என்ற அர்த்தம் என்றார்.