சினிமா

அதிமுகவை அதிர வைத்த விஜய்.. அப்படி பேசியது என்ன?

Published

on

சென்னை: சர்க்கார் பட  இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது வைரலாகி உள்ளது.

நேற்று சென்னையில் சர்க்கார் பட  இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. விஜய் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் எக்கசக்க அரசியல் பேசினார்.

அவர், மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது, இங்க அரசியல்ல மெர்சல் பண்ணி இருக்கோம். நான் வெற்றி பெற வேண்டும் என்று உழைக்கிறேன், சில கூட்டம் நாம் வெற்றி அடைய கூடாது என்றே உழைத்துக் கொண்டே  இருக்கிறார்கள்.

தேர்தல்ல எல்லாம் போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க, நாங்க சர்க்கார் அமைத்துவிட்டு தேர்தலை நிற்க போறோம். புடிச்சு இருந்தா ஒட்டு போடுங்க என்று இழுத்துவிட்டு ”படத்திற்கு சொன்னேன்”

நான் முதலமைச்சரா நடிக்கல, நிஜத்துல  முதலமைச்சர் ஆனா, முதலமைச்சரா நடிக்க மாட்டேன், உண்மையா இருப்பேன் என்று கூறினார்.  அரசியலுக்கு வந்தால் (கற்பனையாக) ஊழலை ஒழிப்பேன் என்று கூறியுள்ளார். ”ஒழிப்பது கஷ்டம்தான் ஆனால் ஒழிப்பேன்”.

தர்மம் ஜெயிக்கும், நியாயம் ஜெயிக்கும், ஆனா லேட்டா ஜெயிக்கும். புழுக்கம் வந்தா மழை வரும். அந்த மாதிரி ரொம்ப நெருக்கடி ஏற்பட்டா ஒருத்தன் வருவான். அவன் லீடரா மாறுவான். அவன் தலைவன் ஆவான். அதான் இயற்கை. அந்த இயற்கையை ஒன்னும் பண்ண முடியாது. அவனுக்கு கீழ நடக்குற சர்க்கார் வேற மாதிரி இருக்கும் என்றுள்ளார்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version