சினிமா

பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சரவணன்!

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்று அதிரடியாக நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த வாரத்துக்கும் முந்தைய வாரம் சேரன், மீரா விவகாரம் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசன் பஞ்சாயத்து செய்துகொண்டிருந்தார். அப்போது பேசிய நடிகர் சரவணன் தான் கல்லூரி காலங்களில் பெண்களை உரசவே பஸ்ஸில் சென்றதாக கூறி பெருமைப்பட்டார். இதனை கமல் ஹாசனும் கண்டிக்காமல் கடந்து சென்றுவிட்டார்.

ஆனால் இது ஊடகங்களில் சர்ச்சையாக வெடித்தது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து பிக்பாஸ் சரவணனை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரவைத்தார். இத்துடன் இந்த விவகாரம் முடிந்தது. ஆனால் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இரவு சரவணன் மீண்டும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்டார்.

அப்போது அவருடன் பேசிய பிக்பாஸ், மீரா மற்றும் சேரன் விவகாரம் தொடர்பாக பேசும் போது, நீங்கள் கல்லூரி காலங்களில் பெண்களை உரசவே பஸ்ஸில் சென்றதாக கூறியிருந்தீர்கள். பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும், அதை தேசிய தொலைக்காட்சியில் கூறியதற்காகவும் நிகழ்ச்சியில் இருந்து உடனே வெளியேற்றப்படுகீர்கள் என்று அறிவித்தார்.

அவரை வழக்கமாக அனுப்பும் மெயின் கேட் வழியாக அனுப்பாமல் கன்ஃப்ஃபெஷன் ரூமில் இருந்த மற்றொரு கதவு வழியாக வெளியே அனுப்பினார் பிக்பாஸ். சரவணனின் இந்த அதிரடி வெளியேற்றம் மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாது. நாளை இது தொடர்பாக அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version