தமிழ்நாடு

சரவணபவன் ராஜகோபால் காலமானார்!

Published

on

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தற்போது காலமானார்.

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தநிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு வசதிகள் சரியாக இல்லை என அவரது மகன் வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தாலும் ஸ்டான்லி மருத்துவமனை அவரை இடமாற்றம் செய்வது சிக்கலானது என அறிவுறுத்தியது.

இருந்தாலும் அவரது மகன் இதற்கு முழு பொறுப்பேற்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமாகி அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இவருக்கு வயது 72. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை  மாரடைப்பு வந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version