செய்திகள்

சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா – அதிர்ச்சி செய்தி

Published

on

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

குறிப்பாக சென்னையில் மிகவும் அதிக பாதிப்பு காணப்படுகிறது. நேற்று ஒரு நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸ் மூட உத்தரவிட்டுள்ளது.

Trending

Exit mobile version