செய்திகள்
சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா – அதிர்ச்சி செய்தி
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
குறிப்பாக சென்னையில் மிகவும் அதிக பாதிப்பு காணப்படுகிறது. நேற்று ஒரு நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸ் மூட உத்தரவிட்டுள்ளது.