சினிமா செய்திகள்

பணப்பெட்டியுடன் வரும் சரத்குமார்: ரூ.3 லட்சத்துடன் வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் யார்?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 92 நாள் முடிவடைந்து இன்று 93வது நாள் நடைபெற உள்ளது என்பதும் தற்போது இந்த நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு நான்கு போட்டியாளர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில் அதற்கு முன்பே 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பணப்பெட்டியுடன் ஒரு போட்டியாளர் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற நிலையில் அந்த நிகழ்வு இன்று பிக்பாஸ் வீட்டில் நடைபெறுகிறது.

பிரபல நடிகர் சரத்குமார் 3 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அதனால் யோசித்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர் மூன்று லட்ச ரூபாயுடன் வெளியேறிக் கொள்ளலாம் என்றும் கூறி விட்டு பெட்டியை வைத்து விட்டு செல்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தாமரை, பிரியங்கா, பாவனி, நிரூப், ராஜூ, அமீர், சிபி ஆகிய ஏழு பேர்கள் இருக்கும் நிலையில் இந்த ஏழு பேர்களில் யார் இந்த மூன்று லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version