இந்தியா
இந்திய அரசியலில் திடீர் திருப்பம்: பிரதமர் மோடி – சரத்பவார் சந்திப்பு!
![sarath pawar - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/sarath-pawar.jpg)
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்பதும் அவரது முயற்சியால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமான கூட்டணி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியதாகவும் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த ஜனாதிபதியாக சரத்பவார் தேர்வு செய்யப்படுவார் என்றும் இது குறித்த பேச்சுவார்த்தை தான் இன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு எதிராக பிரமாண்டமான கூட்டணியை உருவாக்க முயன்ற சரத்பவாரை ஜனாதிபதி பதவி ஆசை காட்டி தன் பக்கம் வளைத்துப் போட்டு உள்ளே போட்டு உள்ளது பாஜக என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சரத்பவார் ஒருவேளை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஆகியோர் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டு முயற்சியிலோ வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.