தமிழ்நாடு

பிரதமர் மோடியின் தாடியை கேலி செய்து பேசிய சரத்குமார்!

Published

on

கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார்.

இந்நிலையில் கோவையில் போட்டியிடும் மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ச.ம.க தலைவர் சரத் குமார் பிரச்சாரம் செய்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தாடியை கேலி செய்யும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

‘நான் ஏன் இப்போது ஷேவ் செய்யாமல் எப்போதும் தாடியுடன் வருகிறேன் என்று கேள்விகள் கேட்கப்படுகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக வளர்த்துள்ள தாடி இது. அந்தப் படம் வந்தவுடன் இந்த தாடி ஏன் வைக்கப்பட்டது என்பது குறித்து உங்களுக்குத் தெரிய வரும்.

தாடி வைத்தவர்களெல்லாம் இன்று நாட்டின் பிரதமர் ஆகி விடுகிறார்கள். நாளைக்கே கமல் சார், முதல்வராகிவிட்டால், என்னை பிரதமராகக் கூட பதவியேற்கச் சொல்வார். அங்கு இருப்பது வெள்ளை தாடி, நான் வைத்திருப்பது கருப்பு தாடி’ என்று கலகலப்பாக பேசினார் சரத் குமார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version