சினிமா செய்திகள்

‘மிரண்டுவிட்டேன்…’- ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்த சந்தோஷ் நாராயணன் ரிவ்யூ..!

Published

on

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கர்ணன்’. இந்தப் படம் விரைவில் திரை அரங்கங்களில் வெளியாகத் தயாராகி வருகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்துக்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கர்ணன் படம் தற்போது தயாராகி உள்ளது. இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜீஷா என்னும் மலையாள நடிகை நாயகி ஆக நடித்துள்ளார்.

கர்ணன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் கர்ணன் படத்தை இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பார்த்துள்ளார். படம் பார்த்தவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனமும் கொடுத்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்ணன் பார்த்தேன். மிரண்டுவிட்டேன். தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் அருமையான குழுவினர் எனப் பார்க்கையில் பெருமையாக உள்ளது. கர்ணந் அனைத்தும் கொடுப்பான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version