சினிமா செய்திகள்

‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பார்ட் 2 படத்தில் நாயகன் ஆகிறார் சந்தானம்..!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படங்களுள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் படமாக ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் இடம் பெற்றிருக்கும்.

அந்தப் படத்தில் சுமார் மூஞ்சி குமார் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்திருப்பார். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் கோகுல் தான் தற்போது இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார். இந்த இரண்டாம் பாகம் படத்துக்கு ‘கொரோனா குமார்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

கொரோனா குமார் படத்தின் நாயகனாக நடிகர் சந்தானம் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்றபடி இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் பல முக்கிய கதாபாத்திரங்களும் கொரோனா குமார் படத்திலும் நடிக்க உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி கூட தனது சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரமாகவே கொரோனா குமார் படத்தில் கெளரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

பிஸ்கோத் படம் தான் சந்தானத்தின் சமீபத்திய திரைப்படம். இதற்குப் பின்னர் டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்துவிட்டார். இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. அடுத்ததாக இயக்குநர் ஶ்ரீநிப்வாச ராவ் இயக்கத்தில் பெயர் அறிவிக்கப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் சந்தானம்.

Trending

Exit mobile version