செய்திகள்

பொதிகையில் சமஸ்கிருதம்!

Published

on

பொதிகை சேனலில் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்திக்கு ஒதுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 15 நிமிடங்கள் சமஸ்கிருத வாராந்திர செய்தி தொகுப்பிற்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தமிழர் வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் முற்றிலும் தொடர்ப்பில்லாத ஒன்றாக உள்ளது. எனவே இதனை ஏற்க முடியாது என மதுரையில் உள்ள ஒருவரால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு தாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம். வேறு சேனலையும் மாற்றிக் கொள்ளலாம், இதனைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன. தேவையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Trending

Exit mobile version