ஆன்மீகம்
சங்கடகர சதுர்த்தி விரதம் என்றால் என்ன?
விநாயக கடவுளுக்காக இருக்கும் முக்கிய விரதங்களில் ஒன்று சங்கடகர சதுர்த்தி விரதம்.
ஒவ்வொருமாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இந்த சங்கடகர சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்படும். இந்த நாளில் பகல் பொழுது முழுவதும் உண்ணா நோம்பிருந்து மாலையில் விநாயகரைப் பூஜை செய்வார்கள்.
பின்னர் சந்திரனைத் தரிசித்த பிறகு விநாயகருக்குப் பிடித்த இனிப்புகளை உண்டு விரதத்தினை முடிப்பார்கள்.
சங்கடகர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் தெய்ப்பிறையில் செவ்வாய்க்கிழமையோடும் வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓராண்டுக்குக் கடைப்பிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கி செல்வம், செல்வாக்கு, கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.