சினிமா செய்திகள்

‘சைலன்ஸ்’ என கத்தும் சஞ்சீவ்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் ‘சைலன்ஸ்’ என ஆவேசமாக சஞ்சீவ் கத்தும் காட்சி போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 60வது நாளை எட்டியுள்ளது என்பதும் இந்த 60 நாட்களில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரேக்கிங் நியூஸ் டாஸ்கில் ரெட் டிவி மற்றும் புளு டிவி என இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர் என்பதும் புளு டிவி அணியை விட ரெட் டிவி அணியினர் அதிக புள்ளிகள் எடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ரெட் டிவி சார்பில் பிரியங்கா மற்றும் சிபி ஆகிய இருவரும் தாமரை மற்றும் வருணை பேட்டி எடுக்கின்றனர். அந்த நேரத்தில் திடீரென விளம்பர இடைவேளை என அபிஷேக் தெரிவித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபி, ‘இப்பொழுது எதற்கு விளம்பர இடைவேளை என கண்டனம் தெரிவிக்கிறார். இதனால் அபிஷேக் மற்றும் சிபி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் நடக்கிறது.

இந்த மோதலில் பிரியங்கா, வருண் உள்பட பலர் கலந்து கொண்டு ஆளாளுக்கு கத்தி கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து திடீரென இந்த டாஸ்கின் நடுவர் சஞ்சீவ் ‘சைலன்ஸ்’ என கத்துகிறார். இதனால் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து என்ன நடக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

seithichurul

Trending

Exit mobile version