பிற விளையாட்டுகள்
முதல் சுற்றில் தோல்வி: சானியா மிர்சா எடுத்த அதிர்ச்சி முடிவு
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் தோல்வி அடைந்ததும் எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் சானியா மிர்சா தோல்வி அடைந்த நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் தோல்வியடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா, ‘இதுவே தனது கடைசி தொடர் என்றும் இதற்கு பிறகு ஓய்வு பெறப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
35 வயதான சானியா மிர்சா கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பதும் பல கோப்பைகளை கைப்பற்றி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சாவுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.