Connect with us

உலகம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா?

Published

on

2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம்  ஊக்குவிப்பு போன்ற காரணங்களுக்காக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளித்து ஒப்பந்தங்களில் கையெழுத்தும் போட்டது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை, ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடை 2020-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதியுடன் காலாவதியானது என்று தெரிவித்து இருந்தது. அதன் படி தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடை முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களிலிருந்து 2018-ம் ஆண்டு பின் வாங்கிய டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகளையும், ஈரான் உடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. வர்த்தகத்தைத் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று மிரட்டியது.

அதே நேரம் இந்திய உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய்க்காகச் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய்க்காக டாலர் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையும், தொடர்ந்து அவர்களுடன் செய்யும் வர்த்தகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. அதை இந்தியாவும் ஏற்றது.

ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. எனவே வரும் நாட்களில் பிற நாடுகள் ஈரான் உடன் வர்த்தகத்தைச் செய்யவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடுவதிலும் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஈரான் இடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. பொருளாதாரத் தடை நீங்கியுள்ளதால் அங்கு இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை குறைப்பு ஏதும் பெரியளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை தொடர்கிறது. நேற்றுக் மூட ஈரான் உடன் வர்த்தகம் செய்து வரும் 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடம்53 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!