சினிமா செய்திகள்
நடிகை சனா கானை கட்டாயப்படுத்தினேனா..?- மறுக்கும் கணவர்
நடிகை சனா கான் இனிமேல் சினிமாவின் நடிக்கக்கூடாது என கட்டாயப்படுத்தவில்லை என்று அவரது கணவர் அனஸ் சையது விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் காளை படத்தில் நடித்தவர் சனா கான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சில நாட்களுக்கு முன்னர் சினிமா துறையில் இருந்து விலகுவதாகவும் இறை வழியைப் பின்பற்றி நடக்கப்போவதாகவும் அறிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே தொழிலதிபர் அனஸ் சையது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சனா கானுக்கு கடந்த நவம்பரில் திருமணம் ஆனதிலிருந்து சமுக வலைதளங்களில் போலி திருமணம், கட்டாயத் திருமணம் எனப் பலவாறு விமர்சனங்கள் எழுந்தன. இவற்றுக்கும் பதிலளிக்கும் வகையில் அனஸ் சையது விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “எங்கள் உறவு குறித்து கேள்வி கேட்க உங்களுக்கு சுந்திரம் உள்ளது. ஆனால், ஒரு நடிகையை ஏன் கல்யாணம் செய்தாய் கேட்பவர்கள், இந்த உறவு எத்தனை நாட்கள் எனக் கேட்பவர்கள் ஆகிய அனைவரும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.
அவர்கள் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது. எங்கள் வாழ்க்கையை நாங்கள் இருவர் மட்டுமே தீர்மானிப்போம். எங்களுக்குள் உள்ள புரிதலின் அளவீடு எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்” என்றுள்ளார்.