சினிமா செய்திகள்
நாகசைதன்யாவின் தம்பிக்கு வாழ்த்து கூறிய சமந்தா: ஏன் தெரியுமா?
பிரபல நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில் அவருடைய குடும்பத்தினரிடம் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் திடீரென நாகசைதன்யாவின் சகோதரருக்கு வாழ்த்துக் கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
நடிகர் நாக சைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனி. இவர் நேற்று தனது இருபத்தி எட்டாவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .
இந்த நிலையில் அகில் அக்கினேனிக்கு சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு தேவையான அனைத்தும் இந்த ஆண்டு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் என்று பதிவு செய்துள்ளார்.
நாகசைதன்யாவின் பிறந்த நாளுக்கே வாழ்த்து சொல்லாத சமந்தா, திடீரென அவருடைய சகோதரருக்கு வாழ்த்து கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாகசைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனி மீது சமந்தா எப்போதுமே மிகவும் பாசத்துடன் இருந்துள்ளார் என்றும் அந்த பாசத்தின் அடிப்படையில் தான் தற்போது அவர் வாழ்த்து கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.