சினிமா செய்திகள்

விவாகரத்து செய்தால் நடிகை சமந்தாவுக்கு ரூ.50 கோடி ஜீவனாம்சமா?

Published

on

நடிகை சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஒருவேளை விவாகரத்து செய்தால் அவருக்கு ரூபாய் 50 கோடி ஜீவனாம்சம் கிடைக்கும் என்று வதந்தி ஒன்று பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தாவும் அவருடைய கணவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ’எஸ்’ என்று வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து அவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு உள்ளார் என்று ஊடகங்கள் ஊகித்தன. மேலும் இது குறித்த கேள்விக்கு இருவரும் பதில் சொல்லாமல் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சமந்தாவும் அவருடைய கணவர் நாக சைதன்யாவும் பிரிய முடிவு செய்துவிட்டதாகவும் நடிகை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூபாய் 50 கோடி கொடுக்க நாகார்ஜுனன் குடும்பத்தினர் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் தெலுங்கு திரையுலகில் இது குறித்த வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின்னர் நடிகை சமந்தா திரையுலகில் திரைப்படங்களில் நடிக்க கூடாது என நாகார்ஜுனா குடும்பத்தினர் நிபந்தனை விதித்ததாகவும், ஆனால் சமந்தா தொடர்ந்து நடித்து வருவது மட்டுமின்றி கவர்ச்சியான வேடங்களிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வருவது தான் நாகார்ஜுனா குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளதாகவும் அதுதான் தற்போது விவாகரத்து வரை வந்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

நடிகை சமந்தா தற்போது தெலுங்கில் ’சாகுந்தலம்’ என்ற திரைப்படத்திலும் தமிழில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழில் அவர் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version