சினிமா செய்திகள்

‘எனக்கு எல்லாமே இந்த மலைதான்’- பல்லாவரம் மலை குறித்து நடிகை சமந்தா நெகிழ்ச்சி!

Published

on

நடிகை சமந்தா பல்லாவரம் மலை குறித்து நெகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை சமந்தா சென்னையில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது அத்தனைப் பேருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் தற்போது செட்டில் ஆகிவிட்டார். நாகார்ஜுனா குடும்பத்துக்கு மருமகள் ஆன போதும் சமந்தாவின் பெற்றோர் இன்னமும் பல்லாவரம் அருகிலேயே வசித்து வருகிறார்கள்.

சமந்தா தனது சிறு வயது முதல் தனது அத்தனை சுக, துக்கங்களிலும் பங்கேற்ற பல்லாவரம் மலை குறித்து நெகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் மலையை வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளார் சமந்தா. மேலும் அந்த பதிவில் சமந்தா தனக்குப் பிடித்த பல்லாவரம் குறித்து விவரித்துள்ளார்.

சமந்தா, “எனது சிறு வயதில் என்னுடைய வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் பல்லாவரம் மலை தெரியும். எனக்கு மிகவும் பிடித்த மலை. என்னைச் சுற்றி உள்ள மனிதர்களை விட என்னைப் பற்றி இந்த மலைக்கு அதிகம் தெரியும். பரிட்சை காலங்களில் பதட்டமான காலைகள், சாமிக்கு சத்தியம் செய்து நிறைவேற்றாமல் போனது, எனது முதல் காதல், முதல் பிரிவு, நண்பரின் மரணம், எனது அழுகை, விடைகொடுத்தல் என அத்தனையும் பார்த்த மலைக்கு இந்தப் பதிவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version