சினிமா செய்திகள்

நடிகை சமந்தா கருக்கலைப்பு செய்தாரா? அவரே அளித்த விளக்கம்!

Published

on

நடிகை சமந்தா கருக்கலைப்பு செய்ததாகவும் வேறொரு ஆணிடம் தொடர்பில் இருந்ததாகவும் வதந்திகள் பரவிய நிலையில் அந்த வதந்திகளுக்கு. வைக்கும் வகையில் அதிரடியாக ஒரு பதிவை நடிகை சமந்தா பதிவு செய்துள்ளார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா மற்றும் நாக சைதன்யா எடுத்த இந்த முடிவு திரையுலக ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்றாலும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதால் ரசிகர்கள் அது குறித்து பெரிதாக கவனித்துக் கொள்ளவில்லை.

ஆனால் ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் இந்த பிரச்சனையை தினசரி தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு வந்தது என்பதும், குறிப்பாக சமந்தா குறித்த வதந்திகளையும் பரப்பி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதில் சமந்தா குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர் என்றும், அவருக்கு வேறு சில ஆண்களிடம் தொடர்பு இருந்ததாகவும் அவர் அடிக்கடி கருக்கலைப்பு செய்ததாகவும் வதந்திகள் பரவியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

என் மீது அக்கறை காட்டும் அனைவருக்கும், என்னை பற்றி வரும் வதந்திகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கும் எனது நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், நான் குழந்தை வேண்டாம் என்று சொன்னதாகவும், நான் கருகலைப்பு செய்ததாகவும் ஒருசிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பதே ஒரு வேதனையான விஷயம். நான் இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. எனவே என்னை பற்றி இப்படி வதந்திகளை பரப்புவது இரக்கமற்ற ஒன்றாகும். ஆனால் இதற்கு பின்பும் என்னை பற்றி எதுவும் பேச நான் அனுமதிமாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version