சினிமா

15 கோடியில் மும்பையில் புது பங்களா வாங்கிய சமந்தா!

Published

on

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே கஷ்டத்தில் கதறி அழுத நிலையில், ரசிகர்கள் மீண்டும் பழையபடி சமந்தா எழுந்து வரவேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நான் இன்னும் சாகல என்றே ட்ரோல்களுக்கும் ஹேட்டர்களுக்கும் பதிலடி கொடுத்த சமந்தா, தற்போது பழையபடி உடல்நலம் தேறி வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களை எல்லாம் போட்டு ஹேட்டர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

#image_title

பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் Citadel வெப் தொடரில் நடிக்க ஜோடி போட்டுள்ள நடிகை சமந்தா அடுத்தடுத்து பல பாலிவுட் படங்களில் நடிக்க உள்ள நிலையில், மும்பையில் புதிதாக 15 கோடி ரூபாய்க்கு கடற்கரையை ஒட்டிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான யசோதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த மாதம் 17ம் தேதி சாகுந்தலம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் காரணமாக அந்த படத்தின் வெளியீடு சற்றே தள்ளிப் போவதாக தெரிகிறது.

#image_title

இந்நிலையில், சமந்தா மும்பையிலேயே வீடு வாங்கி இருப்பது பாலிவுட் நடிகைகளுக்கு பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸில் தனியாக வசித்து வந்த சமந்தா தற்போது மும்பையில் வாங்கியுள்ள புதிய வீட்டில் தான் அதிகமான நேரத்தை செலவழித்து வருவதாக கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version