சினிமா

என் குழந்தைகள் சோகமாக இருக்கிறது.. சமந்தா கொடுத்த அதிர்ச்சி..

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

samantha

சமந்தாவின் விவாகரத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. பல யுடியூப் சேனல்கள் மற்றும் ஊடகங்கள் அவரை பற்றி செய்திகள் வெளியிட்டது. சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் இந்த பிரச்சனையை தினசரி தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு வந்தது. குறிப்பாக சமந்தா குறித்த வதந்திகளையும் பரப்பி வந்தது. ஆனால் அது அனைத்தும் தவறான செய்தி என சமந்தா விளக்கமளித்தார்.

மேலும், கணவரை பிரிந்த பின் ஆன்மீக பயணம் மேற்கொண்டார் சமந்தா. அதன் தனது பெற்றோர்கள் தங்கியிருக்கும் சென்னை திரும்பினார். தற்போது சென்னையில்தான் இருக்கும் அவர் மழையில் மாட்டிக் கொண்டதால் ஹைதராபாத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு திரும்பவில்லை.

insta

இந்நிலையில், அங்கு தனது வீட்டில் இருக்கும் தனது 2 செல்ல நாய்களின் புகைப்படங்களை பகிர்ந்து ‘நான் ஒரு நாள் வீட்டில் இல்லை. என் சோகமான முதல் குழந்தை’ என பதிவிட்டுள்ளார். மேலும் ‘ஒன்று மட்டும் நிச்சயம். அவர்கள் தங்கள் அம்மாவை நீண்ட நாள் சென்னையில் தங்க விட மாட்டார்கள் போல் தெரிகிறது’ என பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version