சினிமா

ராதாரவியை கிண்டலடிக்கும் சமந்தா: மாத்திரை போட்டுக்கொண்டு நயன்தாரா படம் பாருங்கள்!

Published

on

பிரபல நடிகர் ராதாரவி பிரபல நடிகை நயன்தாரா குறித்து கூறிய சர்ச்சை கருத்து பூதாகரமாக வெடிக்க அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் மு.க.ஸ்டாலின். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் ராதாரவியின் பேச்சுக்கு கண்டனங்கள் வந்தவாறு உள்ளன.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா இன்னைக்கு ஒரு ஸ்டார். புரட்சித் தலைவர், ரஜினி படத்தோட நயன்தாரா படத்தை ஒப்பிடாதீர்கள். அவர்களெல்லாம் லெஜண்ட்ஸ். நயன்தாரா ஒரு நல்ல நடிகை. சினிமாவில இவ்ளோ நாள் இருக்கிறதே பெரிய விஷயம். நயன்தாராவை பற்றி வராத செய்தியே இல்லை.

நயன்தாரா, பேயாகவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் சாமி வேஷம் போடறதுன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. ஆனால், இப்பல்லாம் யாரு வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். இன்று, பார்த்தவுடன் கும்பிட தோன்றுபவர்களும் சாமி வேஷம் போடலாம். பார்த்தவுடன் கூப்பிட தோன்றுபவர்களும் சாமி வேஷம் போடலாம் என கொச்சையாக பேசினார்.

ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு திரைத்துறை என பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவியை கிண்டலடிக்கும் விதமாக பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ராதாரவி தன் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார்! உங்களைப் பார்த்தா எனக்கு பாவமாக உள்ளது. உங்கள் ஆன்மா அமைதியைத் தேட விரும்புகிறேன். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version