சினிமா செய்திகள்
மன அழுத்தத்தில் நடிகை சமந்தா: என்ன செய்கிறார் தெரியுமா?
பிரபல நடிகை சமந்தா தான் மன அழுத்தத்தில் இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
கணவர் நாக சைதன்யாவை தான் விவாகரத்து செய்யப் போவதாக சமந்தா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அவர் நெருக்கமான காட்சிகளில் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருவதாகவும் நாகார்ஜுனா குடும்பத்தினர் குற்றச்சாட்டியதாகவும், அதனால் சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு மன அழுத்தம் உள்ளது. இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக ஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இது சாதாரணமானதுதான். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா தியானம் உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறேன்.
மேலும் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் நான் வளர்க்கும் நாய் குட்டி உடன் விளையாடுகிறேன். வளர்ப்பு பிராணிகள் உடன் விளையாடும் போது எனது மன அழுத்தம் குறைகிறது. எனது நாய்க்குட்டி இடம் சிறிது நேரம் விளையாடினாலே போதும், நான் மிகவும் மென்மையாகி இருக்கிறேன். இன்னும் ஓய்வு வேண்டும் என்று நினைத்தால் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல முயற்சிப்பேன். அதன்மூலம் எனது மன அழுத்தத்தை நான் குறைத்துக் கொள்வேன்’ என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.