சினிமா

சந்தேகத்தில் சமந்தா

Published

on

தமிழ், தெலுங்கின் தற்போதைய முன்னணிக் கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. அவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாகசைத்தன்யாவை சமீபத்தில் மணமுடித்தார்.
திருமணத்திற்குப் பின்னும் நடிப்பைத் தொடருவேன் என அறிவித்தவர், ’இரும்புத்திரை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதற்குப் பின்னும் கைவசம் அதிக படங்கள் குவிந்துள்ள நிலையில் தற்பொழுது ஒரே நேரத்தில் அவரது இரண்டு படங்களும் வெளியாகவிருக்கின்றன.
தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும் ‘யூ- டர்ன்’ என்ற படத்தில் ஆதி கதாநாயகனாகவும் சமந்தா கதாநாயகியாகவும்  நடிக்கின்றனர். அதே போல சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்திலும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதாக யதேச்சையாக அமைந்து விட்டது.
அதனால் மக்கள் இரு வேறு படங்களில் தன்னை ஏற்றுக்கொள்வரா என்ற சந்தேகமும் தயக்கமும் அவருக்கு இருந்ததாம். எனினும் இரண்டும் முற்றிலும் வெவ்வேறு கதைக்களம் கொண்ட படங்களாதலால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெரும் என்ற நம்பிக்கையே வேறூன்றி இருப்பதாக அவர் கூறினார்.
seithichurul

Trending

Exit mobile version