கிசு கிசு
“ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு சமந்தா இவ்வளவு சம்பளம் வாங்கினாரா.. அடேங்கப்பா…!
புஷ்பா படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். இப்போது இந்த பாடலுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் ஆச்சரியப்படுத்தியுள்ளன.
சமந்தா நடிப்பில் உருவான இந்த ஊ சொல்றியா மாமா பாடல் வரிகள் தமிழில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த பாடல் வரிகள் ஆண்களைப் புண்படுத்தும் படி உள்ளது என போராட்டங்கள் கூட நடைபெற்றன.
இது போன்ற ஐட்டம் பாடல்களுக்கு பெரும்பாலும் முன்னணி நடிகைகள் நடிப்பதில்லை. ஆனால் அண்மையில் சமந்தாவுக்கு நாக சைதன்யாவுடன் விவாகரத்து ஆனது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, பல புதிய படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இருந்தாலும் புஷ்பா படத்தின் இந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என முன்னதாக தகவல்கள் வெளியாகி வந்தனர்.
இந்நிலையில் இந்த பாடலில் 3 நிமிடம் நடனம் ஆட சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட சமந்தா மறுத்ததாகவும், ஆனால் அல்லு அர்ஜுன் வற்புறுத்தலின் பேரில் சமந்தா நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பளத்தை வைத்துப் பார்க்கும் போது தென் இந்திய நடிகைகளில் சமந்தா தான் அதிக சம்பளம் பெறுகிறார் என திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
சமந்தா நடிப்பில் உருவான முதல் ஐட்டம் பாடல் “ஊ சொல்றியா மாமா” என்பது குறிப்பிடத்தக்கது.