சினிமா செய்திகள்

விவாகரத்து போஸ்ட்டை நீக்கிய சமந்தா: மீண்டும் கணவருடன் இணைகிறாரா?

Published

on

நடிகை சமந்தா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்திருந்த நிலையில் அந்த போஸ்ட்களை தற்போது திடீரென நீக்கியுள்ளது ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இருவரும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 200 கோடி ரூபாய் சமந்தாவுக்கு ஜீவனாம்சம் தரப் போவதாகவும் நாகசைதன்யா வேறு ஒருவரை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் திடீரென சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக கூறியிருந்த போஸ்ட்டை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் நாக சைதன்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு இன்னும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து போஸ்ட்டை சமந்தா நீக்கி உள்ளதால் மீண்டும் அவர் தனது கணவருடன் இணையப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. சமந்தா தனது கணவருடன் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்த போதிலும் இன்னும் நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்து வழக்கை பதிவு செய்யவில்லை என்பதால் மீண்டும் இருவரும் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version