சினிமா செய்திகள்

கணவன் – மனைவியாக பிரிகிறோம்: சமந்தா அறிவிப்பு

Published

on

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகிய இருவரும் தங்களது சமூகவலைதளத்தில் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இருவரும் கணவன் மனைவியாக இருந்த நிலையில் இருவரும் பிரிய போவதாகவும் தங்களுடைய நட்பு தொடர்ந்து நீடிக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய தனிப்பட்ட விவகாரத்தை ரசிகர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நான்கு ஆண்டுகால சமந்தாவின் திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version