சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் சமந்தா- நாக சைதன்யா? பெண் இயக்குனரின் முயற்சி பலிக்குமா?

Published

on

திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான சமந்தா மற்றும் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்துவிட்ட நிலையில் அவர்களை மீண்டும் இணைத்து வைக்க பெண் இயக்குனர் ஒருவர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான நந்தினி ரெட்டி என்பவரின் இயக்கத்தில் சமந்தா நடித்த ’ஓ பேபி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை அடுத்து சமந்தா மற்றும் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க நந்தினி ரெட்டி திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்து விட்டதால் மீண்டும் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த படத்தில் நடிக்க வைக்க அவர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் சமந்தா மற்றும் நாக சைதன்யாவிடம் இருந்து இந்த படத்தில் நடிப்பதற்கான சம்மதம் வரவில்லை என்று கூறப்படுவதால் இருவரில் ஒருவரை படத்தில் மாற்ற குறிப்பாக சமந்தாவுக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க நந்தினி ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் நிஜவாழ்வில் பிரிந்து விட்டாலும் திரையிலாவது இணைய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் வேண்டுகோள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending

Exit mobile version