சினிமா செய்திகள்

பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சல்மான்கான் அனுமதி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சென்று நெருக்கமானவர்களுக்கு பார்ட்டி வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் இன்று அதிகாலை தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பண்ணிஅ வீட்டில் பார்ட்டி கொடுத்துள்ளார்.

அப்போது திடீரென சல்மான்கானின் கையில் பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு உடனடியாக விஷம் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனையில் அவரது உடல்நிலை கண்காணிக்கபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சல்மான்கானை கடித்த பாம்பு விஷமற்ற பாம்பு என்றும், அவரது உடல் நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்றும், இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சல்மான்கானுக்கு பாம்பு கடித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று தெரிந்த பின்னரே நிம்மதி ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version