கிரிக்கெட்

ஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்!

Published

on

இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ, ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரீமியம்ர் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது.

அதற்கு போட்டியாக இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட உள்ளது. அதில் ஒரு அணியை சல்மான் கான் குடும்பத்தினர் ஒரு அணியை வாங்கியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக் தொடருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதற்கு போட்டியாக பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் ஆணையங்கள் டி20 போட்டிகளை நடத்தி வருகின்றன. அப்படித் தொடங்கப்பட்டதில் ஒன்றுதான் லங்கா பிரீமியர் லீக்.

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை எப்படி இந்தியாவில் பல்வேறு வணிகர்கள் மற்றும் நடிகர்கள் ஏலத்தில் எடுத்துள்ளார்களோ அதே போன்று, அணிகளின் உரிமையாளர்களுக்கான ஏலம் நடைபெற்றுள்ளது.

அதில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடும்பத்தினர் ‘கண்டி டஸ்கர்ஸ்’ என்ற லங்கா ப்ரீமியர் லீக் அணியை வாங்கியுள்ளனர். இந்த அணியில் விளையாட மேற்கு வங்கி அணி நட்சத்திர கிரிக்கெட் ஆடாக்கரரான கிரிஸ் கெயில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Trending

Exit mobile version