தமிழ்நாடு
அனைத்து கடைகளும் 6 மணி வரை மட்டுமே: நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!
![vege stores - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/05/vege-stores.jpg)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து கூடுதலாக கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சேலம் மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6.00 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், மேற்படி வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை.
செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
வ.உ.சி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
துணிக்கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
சேலம் ஊரகம்
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டிற்கு பயணிக்கும் பயணிகள் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். கொங்கணாபும் வாரச்சந்தை 23.08.2021 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. வீரகனூர் வாரச்சந்தை 23.08.2021 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது.. மேட்டர் அணை பூங்கா 29.09.2021 வரை பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.
இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.