தமிழ்நாடு
நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற அலுவலக உதவியாளர்: சேலத்தில் பரபரப்பு
![salem court - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/salem-court.jpg)
சேலத்தில் நீதிபதி ஒருவரை நீதிமன்ற அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன் பாண்டியன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவர் இன்று காலை நீதிமன்றத்திற்கு வந்தபோது திடீரென அங்கு வந்த அலுவலக உதவியாளர் நீதிபதியை கத்தியால் குத்தினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கத்தியால் குத்தப்பட்ட நீதிபதி பொன்பாண்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4-வது குற்றவியல் நீதிபதி பொன்பாண்டியை கத்தியால் குத்டிய அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஒருவரையே அந்த நீதிமன்ற அலுவலக உதவியாளர் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.