தமிழ்நாடு
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 76 வயது தொழிலதிபர்!
சேலத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் 17வயதான மாணவி ஒருவருக்கு 76 வயதான தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த 76 வயதான தொழிலதிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி தந்தையை இழந்தவர், தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது சித்தியுடன் வசித்து வருகிறார். ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி நேற்று முனதினம் இரவு 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய சித்தி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் நடராஜன்(76) என்பவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆத்தூரில் உள்ள ஹீரோ மோட்டார் நிறுவத்தின் முகவராகச் செயல்படும் நடராஜன் மனைவியை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்குப் பல இடங்களில் சொந்த கட்டடங்களும், வணிக நிறுவனமும், அடுக்கு மாடி வீடுகளும் உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் பணத்தை வாடகையாகப் பெற்று வருகிறார் நடராஜன்.
இவர் வீட்டைச் சுத்தம் செய்யவும், தண்ணீர் எடுத்து வைக்கவும் அவ்வப்போது தன்னை அழைத்து வேலை வாங்கியதாகத் தெரிவித்த மாணவி, கடந்த இரண்டு மாதங்களாக அவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஆதராங்களும் போலீசாரிடம் கொடுக்கப்பட்டதால், தொழிலதிபர் நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.