வணிகம்

நோக்கியா தொழிற்சாலையை வாங்கிய ஐபோனுக்கு சார்ஜர் தயாரிக்கும் நிறுவனம்!

Published

on

ஒரு காலத்தில் செல்போன் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் நோக்கியா. இந்த நிறுவனம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பின்னர் தமிழக அரசுடன் ஏற்பட்ட வரி சிக்கல் காரணமாக மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர் நோக்கியா ஆலையை மைக்ரோசாஃப்ட் குத்தகைக்கு எடுத்து நடத்தியது. ஆனால் மொபைல் வணிகத்திலிருந்து மைக்ரோசாஃப்ட் வெளியேற முடிவு செய்த உடன் 2014-ம் ஆண்டு மீண்டும் ஆலை மூடப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த நிறுவனத்தை செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் சால்காம்ப் வாங உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் தான் ஐபோனுக்கு சார்ஜர் தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சால்காம்ப் நிறுவனம் 2020-ம் ஆண்டு இந்த தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்கும் என்றும், நேரடியாக 10,000 பேருக்கும், மறைமுகமாக 50,000 பேருக்கும் வேலை கிடைக்கும். இதற்காக 2000 கோடி ரூபாய் முதலீட்டை சால்காம்ப் செய்ய உள்ளது என்று ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் போன் உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version