டிவி

பிக்பாஸ் பெண் போட்டியாளர்களின் திகைக்க வைக்கும் ‘சம்பளம்’… ஜாக்பாட் அடித்த ரம்யா பாண்டியன்

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்த சூழலில் பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் ரம்யா பாண்டியன் 100 நாள் வரை இருக்கப் போவதால் ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளார்.

இந்த சீசனிலேயே அதிகப்பட்சமாக நடிகை ரேகா மற்றும் சனம் ஷெட்டி 1 நாளுக்கு 1 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுவதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக சுசித்ரா ஒரு நாளைக்கு 80 ஆயிரம் ரூபாயும் அர்ச்சனா 75 ஆயிரம் ரூபாயும் பெறுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. ரம்யா பாண்டியன் 75 ஆயிரம் ரூபாய், கேபி மற்றும் ஷிவானி 60 ஆயிரம் ரூபாயும் நிஷா மற்றும் அனிதா 40 ஆயிரம் ரூபாயும் சம்பளமாகப் பெறுவதாக ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இதில் ரம்யா பாண்டியன் முழுவதுமாக 100 நாட்கள் இருக்கப் போகிறார் என்பது இன்று உறுதி ஆகியுள்ளது. இதன் மூலம் அதிகமான ஒரு ஜாக்பாட் தொகையை ரம்யா கைப்பற்றி உள்ளார். 106 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் எனக் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்..!

seithichurul

Trending

Exit mobile version