சினிமா செய்திகள்
இனிமேல் இது வேண்டாம்.. கோவமாக விலகிய சாக்ஷி அகர்வால்!
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சென்ற 16-ம் தேதி இந்திய இராணுவ வீரர்கள் மீது சீன இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் இறந்தனர்.
எனவே சீன பொருட்களை புறக்கணிப்போம், இந்திய பொருட்களை வாங்குவோம் என்ற நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
அதனை ஆதரிக்கும் விதமாக பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற நடிகை சாக்ஷி அகர்வால், “நாம் அமைதியை விரும்பும் நாடு. ஆனால் சீனா அதை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு, நமக்கு சொந்தமானதை ஆக்கிரமிக்க முயல்கிறது. எனவே சீன பொருட்களை தவிர்ப்போம், சீனா வை புறக்கணிப்போம். டிக்டாக்கில் என்னை 2 லட்சத்து 18 ஆயிரம் பின்பற்றுகின்றனர். சீனாவைப் புறக்கணிக்கும் விதமாக அதிலிருந்து நான் வெளியேறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சாக்ஷி அகர்வாலின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் வரவேற்று வருகின்றனர்.
We are a Country of Peace , But China is taking advantage of that & is trying to take away ,what belongs to us . HereBy I pledge to #BoycottChineseProduct #BoycottChina & won’t be doing any Chinese Endorsements.Deleting my TikTok account Where I have 218k Followers and 1M+ Hearts pic.twitter.com/qDpfLOYsC6
— Sakshi Agarwal (@ssakshiagarwal) June 20, 2020