பிற விளையாட்டுகள்

என்னை வெளியேற்றியதில் அவ்வளவு மகிழ்ச்சியா: நொந்து போன சாய்னா நேவால்

Published

on

என்னை காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து வெளியேற்றியதில் அவ்வளவு மகிழ்ச்சியா? என சாய்னா நேவால் மனம் நொந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் எனக்கு பட்டத்தை தக்கவைக்க விருப்பம் இல்லை என்பது போல் செய்திகள் வெளியாகி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

ஐரோப்பாவில் 3 வாரங்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி விட்டு இப்போது தான் தாயகம் திரும்பியுள்ளேன். அடுத்த இரு வாரத்திற்குள் ஆசிய சாம்பியன்ஷிப் நடக்க உள்ளது. இப்படிப்பட்டநிலைமையில் ஒரு மூத்த வீராங்கனை அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்பது என்பது இயலாத காரியம்.

இதனால் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறுகிய கால அவகாசமே இருப்பதால் தகுதி போட்டியில் என்னால் பங்கேற்க இயலாது என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு தகவல் தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் இருந்து என்னை வெளியேற்றுவது அவர்களுக்கு (பேட்மிண்டன் சம்மேளனம்) மகிழ்ச்சி அளிப்பதுபோல் தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version