சினிமா செய்திகள்

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Published

on

உங்களில் யார் பிரபுதேவா நடன நிகழ்ச்சி மூலம் பொழுதுபோக்கு தளத்திற்கு வந்த சாய் பல்லவி, ஜார்ஜியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் 2016-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய சாய் பல்லவி, வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவ பணிகள் செய்ய எழுத வேண்டிய தேர்வை இதுவரை எழுதாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் இந்திய மருத்துவருக்கான தேர்வைச் சாய் பல்லவி எழுத வந்துள்ளார்.

கொரோனா காலம் என்பதால் மாஸ்க் அணிந்து வந்த சாய் பல்லவியை முதலில் யார் என்று தெரியாத சிலர் அவர் பேசும் போது அவரது குரலை வைத்து கண்டு பிடித்துவிட்டனர்.

அதனால் தேர்வுக்குப் பின்பு தன்னுடன் தேர்வு எழுத வந்த பிற மாணவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சாய் பல்லவியில் வீடியோ இப்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version