Connect with us

தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தலில் போட்டியா..? அடுத்தகட்ட அரசியல் மூவ் என்ன? – மனம் திறக்கும் சகாயம்

Published

on

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தற்போது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடக் கூடும் என்று சிலர் ஆருடம் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, சகாயம், நாம் தமிழர் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தன் ‘மக்கள் பாதை’ இயக்கத்தில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளார் சகாயம். தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் உரையாற்றி வருகிறார். சகாயம், சமீபத்தில் தான் பார்த்து வந்த ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்பு ஓய்வு கேட்டிருந்தார். அவருக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் விருப்ப ஓய்வு கொடுத்தது தமிழக அரசு.

இந்நிலையில் தன் அரசியல் வருகை குறித்து சகாயத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த போது, என்னிடம் தொடர்ந்து அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டு வந்தது. நான் அரசு அதிகாரி. என் கடமையைச் செய்ய நான் அரசிடம் இருந்து நான் ஊதியம் பெற்று வந்தேன். இப்படி இருக்கையில் என்னிடம் ஏன் அரசியல் குறித்து கேள்வி கேட்கிறார்கள் என்று கேட்டு வந்தேன். அதையே தான் நான் இப்போதும் கேட்கிறேன். மக்கள் பாதை இயக்கம் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கான பணிகளை மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த சமூக மாற்றமானது விரைவில் நிர்வாக மாற்றத்தையும் கொண்டு வரலாம்’ என்றவர்,

ஊழலுக்கு எதிரான தன் பயணம் குறித்து, ‘நான் அரசு அதிகாரியாக இருந்த போது, தனி ஒரு ஆளாக இருந்து ஊழலை எதிர்த்தேன். அதற்காக பல்வேறு முறை பணி மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டேன். நான் ஊழலை எதிர்ப்பது என்பதை, வெறுமனே லஞ்சம் வாங்காமல் செயல்படுவதாக பார்க்கவில்லை. ஊழல் என்பது தான், நம் நாட்டின் மொத்த வளர்ச்சியையும் தடுக்கின்றது என்று நம்புகிறேன். அதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையும் என்றும் நினைக்கிறேன். அதற்கான சமூக மாற்றப் பணிகளைத்தான் மக்கள் பாதை இயக்கம் மூலம் செய்து வருகின்றேன்’ என்று கூறினார்.

தமிழ்ச் சமூகம் குறித்து சகாயம் பேசுகையில், ‘தமிழ்ச் சமூகத்தில் நேர்மை என்பது குறைந்துள்ளதை நான் காண்கிறேன். ஒரு சமூகமாக நாம் விழித்தெழ வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ்ச் சமூகம் தன் அடிமைத்தனங்களை உடைத்தெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஊழலை எதிர்த்து, நேர்மையான சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற வேண்டும். அப்படி மாறினால், நேர்மையான தலைவர்களை இந்தச் சமூகம் தானாக தேர்ந்தெடுக்கும். அந்த மாற்றத்துக்காகத் தான் நான் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்று முடித்தார்.

 

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!