கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் திணற வைக்கும் இந்தியா: சச்சின் பாராட்டு!

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இருபது ஓவர் போட்டி தொடரை சமன் செய்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டி அடிலெய்டில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இந்திய அணி வீரர்கள் பலரும் மோசமான ஷாட்டை தேர்வு செய்து அடித்ததில் இந்திய அணி மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. புஜாராவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஓரளவுக்கு கௌரவமான ரன்னை குவித்தது. இறுதியாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக புஜாரா 123 ரன் எடுத்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியளித்தது. அந்த அணியில் ஹெட் அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். இந்தியாவை சேர்ந்த அஸ்வின் மற்றும் பும்ரா 3 விக்கெட்டும் ஷர்மா மற்றும் ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்த மோசமான ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சச்சின் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆஸ்திரேலியா அணி அவர்களது சொந்த மண்ணில் விளையாட இவ்வளவு திணறி நான் பார்த்ததில்லை. ஆஸ்திரேலியாவின் இந்த நிலையை இந்திய அணி சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும். சிறப்பாக பந்துவீசிய அஸ்வினுக்கு பாராட்டுக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version