கிரிக்கெட்
சச்சினுக்கு அளித்து வந்த ‘X’ பிரிவு பாதுகாப்பு நீக்கம்!
![Sachin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/Sachin.jpg)
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘X’ பிரிவு பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது.
‘X’ பிரிவு பாதுகாப்பின் கீழ் சச்சின் டெண்டுல்கருடன் எப்போதும் ஒரு காவலர் இருப்பார். சச்சின் டெண்டுல்கரின் ராஜ்ய சம்பா உறுப்பினர் பதவிக் காலம் 2018 ஏப்ரல் 26-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதியதாக பொறுப்பேற்றுள்ள உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு ச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘X’ பிரிவு பாதுகாப்பை நீக்கியுள்ளது.
அதே நேரம் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்திய தாக்கரேவுக்கும், காந்தியவாதி அண்ணா ஷசாரேவிக்கும் ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சச்சின் மட்டுமல்லாமல் பாஜக தலைவர் ஏக்நாத் கட்சே, முன்னாள் உத்திர பிரதேச ஆளுநர் ராம் நாயிக் ஆகியோரின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது.