சினிமா செய்திகள்

’தலைவா’ என அழைத்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் தெண்டுல்கர்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தாதாசாகேப் பால்கே விருது பெற்றதை அடுத்து பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ’தலைவா’ என அழைத்து சச்சின் டெண்டுல்கர் அவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்தியாவின் மிக உயரிய திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தாலும் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் கமல்ஹாசன் மற்றும் ஒரு சில திரையுலக பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் சுட்டிக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ’தலைவா’ என அழைத்து ரஜினிக்கு தனது வாழ்த்தினை சச்சின் தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு முறையும் தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள். அந்த வகையில் ’தலைவா’ ரஜினிகாந்த் அவர்கள் ஒவ்வொரு முறையும் அதை செய்கிறார். தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்கிறார். தாதா சாகிப் பால்கே விருது பெற்ற ரஜினி அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்வீட்டை அடுத்து ரஜினி ரசிகர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

Trending

Exit mobile version