கிரிக்கெட்
ஆக்சிஜன் வாங்குவதற்கு ரூ.1 கோடி நன்கொடை செய்த சச்சின்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலுத்த வேண்டிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து ஆக்சிஜன் வாங்குவதற்காக தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் தாராளமாக நிதி வழங்கி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது இந்தியாவின் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூபாய் ஒரு கோடி ஆக்சிஜன் வாங்குவதற்காக நிதி உதவி செய்துள்ளார். கொரோனாவுடன் போராடும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்பதற்காக மிஷன் ஆக்சிஜன் என்ற நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் இந்த ஒரு கோடி ரூபாயை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது ’கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவது சவாலான நிலையாக உள்ளது. பொதுமக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது.
???????? pic.twitter.com/rFEDOCFOkP
— Sachin Tendulkar (@sachin_rt) April 29, 2021
இந்த நிலையில் 250க்கும் அதிகமான இளம் தொழில் முனைவோர் குழு ஆக்சிசனை இறக்குமதி செய்வதற்கும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு நன்கொடை அளிப்பதற்கு நிதி திரட்டுவதற்காக மிஷின் ஆக்சிஜன் என்ற அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. அந்த அமைப்பில் நானும் பங்கேற்று உள்ளேன். அவர்களின் முயற்சியால் விரைவில் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும் என்று நம்புகிறேன்/ என்னுடைய பங்களிப்பாக இந்த அமைப்புக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளித்து உள்ளேன். இந்த தொற்று நோயை எதிரித்து போராட அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்று சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.