கிரிக்கெட்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் எப்படி இருக்கின்றார்? இன்ஸ்டாகிராம் பதிவு

Published

on

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

அதன் பின்னர் ஒரு சில நாட்கள் கழித்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் கொரோனா நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நான் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். இருப்பினும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளதை அடுத்து எனக்கு நானே தனிமைப்படுத்திக்கொண்டு ஓய்வு எடுத்து வருகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் உள்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிகவும் சிரத்தையாக என்னை கவனித்துக் கொண்டார்கள். கடுமையான சூழ்நிலையிலும் கடந்த ஒரு ஆண்டாக மருத்துவர்கள் ஓய்வே இல்லாமல் பணி செய்வது மிகப்பெரிய மரியாதைக்குரிய செயலாகும்’ என்று அவர் பாராட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version