இந்தியா
பெண்களுக்கு எதிராக களமிறங்கிய பெண்கள்.. சபரிமலையில் போராளிகள் கெடுபிடி
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
இன்று காலையே சில பெண்கள் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த இந்துத்துவா அமைப்பினர் பெண்கள் யாரையும் உள்ளே விடவில்லை.
காலையில் அங்கு செய்து சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர்களையும் அவர்கள் உள்ளே விடவில்லை. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றே தொடங்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பெண்கள் வரிசையாக வந்து நின்று கோவிலுக்கு உள்ளே செல்லும் கார்களை மறித்து சோதனை செய்து வருகிறார்கள்.
காருக்குள் பெண்கள் இருந்தால் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு வெளியே நிற்க சொல்கிறார்கள். இது குறித்து வீடியோ வெளியாகி உள்ளது.
ஆனால் என்ன நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.