செய்திகள்
சபரிமலை தீர்ப்பு: அதிதி பாலன் வரவேற்பு
![Sabarimala verdict - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Sabarimala-verdict.bmp)
எந்த வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அருவி பட நாயகி அதிதி பாலனும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
மேலும், சிறு வயதில், அதிதி பாலன் மூன்று முறை தனது தந்தையுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், மீண்டும் தனக்கு சபரிமலை செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அதிதி பாலன் தெரிவித்தார்.
ஈரோட்டில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அதிதி பாலன், அங்கு செய்தியாளர்களால் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு விடை அளித்தார். மேலும், ஓரினச் சேர்க்கை தவறில்லை, கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல போன்ற தீர்ப்புகளையும் தான் வரவேற்பதாக அதிதி பாலன் தெரிவித்தார்.
அருவி படத்தின் மூலம் ஆழமான வெளிப்படுத்திய அதிதி பாலனின் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார் புன்னகையுடன்..