இந்தியா

சபரிமலையில் முதல்முறை பெண் போலீசார்.. கேரள அரசு அதிரடி!

Published

on

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண் போலீசாரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.

ஆனால் கோவிலுக்குள் ஒரு பெண் கூட கடைசி  வரை நுழையவில்லை. இன்று இந்த கோவிலின் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இதற்காக கோவிலுக்கு முன் 3000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்று மாலை இன்னும் அதிக எண்ணிக்கையில் போலீசார் வர உள்ளனர். அதேசமயம் ஆண் பக்கதர்களும் கோவிலை நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள்.

 

 

seithichurul

Trending

Exit mobile version