உலகம்
சபரிமலை முழு அடைப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறை.. பதற்றம்!
![2019_1_img02_Jan_2019_PTI1_2_2019_000180B - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/2019_1_img02_Jan_2019_PTI1_2_2019_000180B.jpeg)
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இதனால் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலையில் இருந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் கேரளாவில் நடக்கும் முழு அடைப்பில் திடீர் என்று கலவரம் ஏற்பட்டுள்ளது. கொல்லம் பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் வேறு சில பகுதிகளிலும் கலவரம் நடப்பதாக தகவல்கள் வருகிறது.