இந்தியா

போர்க்களமான சபரிமலை.. போலீஸ் மீது கல்வீச்சு.. பலர் கைது!

Published

on

 

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது. அந்த பகுதியில்தான் போராட்டக்காரர்கள் கூடி நிற்கிறார்கள்.

அங்கிருந்துதான் மலைக்கு செல்ல வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கேயே பெண்களை மறித்து போராடி வருகிறார்கள். அந்த பகுதிக்கு பின் பெண்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இந்த போராட்டம் காலையில் கலவரமாக மாறியது.

இந்த நிலையில் கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

முன்னாள் சபரிமலை தேவசம் போர்ட் தலைவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் பல  பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 

Trending

Exit mobile version